பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான Google, Microsoft, Amazon, Meta, Twitter, Salesforce, Cisco, Snap மற்றும் பிற நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் தங்கள் நிறுவனத்திலிருந்து 1,00,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன, மேலும் பல ஊழியர்கள் இன்னும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவலை நிறுவனங்கள் தெரிவிததுயுள்ளனர். ஆனால் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏன் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த ஒரு பதிவில் காணலாம்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், உலக முழுவதும் COVID-19 தொற்றுநோயால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை உருவனது, அதாவது மக்கள் அனைவரும் இணைய மென்பொருள் வழியாக தங்கள் பணிகளை செய்துவந்தனர், அதனால் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான விற்பனை மற்றும் தயாரிப்பு தேவை அதிகரித்தது. நிறுவனகள் தங்கள் தயாரிப்புகளை அதிகரிக்க அதிகமான ஊழியர்களை அதிக சம்பளத்திற்கு பணி அமைத்தினார். தற்போது அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதால் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்தது.
பணிநீக்கங்கள் பொதுவாக வளர்ச்சி குறையும் காலம், பணவீக்கத்தை எதிர்த்துப் போராட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அடுத்த ஆண்டு மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் போன்றவற்றால் பணிநீக்கம்ன் என்ற நிலைக்கு நிறுவனமானது தள்ளப்படுகிறது. நவம்பர் 2022 இல் கணிசமான பணிநீக்கங்களை அறிவித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் Meta ஆகும். மேலும் சில காரணங்களுக்காக நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க தேவைக்கு அதிகமான ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற்றினார்.
நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான சில காரணங்கள்:
Inflation and Recession
2022 முடிவில் நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதும், அவர்கள் ஒரு புதிய சிக்கலை எதிர்கொண்டனர். பொருளாதாரம் மந்தநிலைக்கு மத்தியில், நிறுவனங்கள் அவர்களின் ஊதியங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளதால் அதிகப்படியான பணம் சம்பளமாக கொடுக்க நேர்ந்தது. அதே நேரத்தில், சில முதலீட்டாளர்கள் லாப வரம்பைப் பாதுகாக்க தங்கள் செலவினங்களைக் குறைக்க அழுத்தம் கொடுத்தனர்.
Negative cash flows in new investments
Amazon நிறுவனத்தின் robotics division, Microsoft நிறுவனத்தின் virtual reality மற்றும் metaverse நிறுவனத்தின் AltspaceVR போன்ற பல புதிய முயற்சிகளுக்காக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்கின்றன மற்றும் அதற்கான பணத்தேவையை சமாளிக்க பணி நீக்கமானது ஏற்படலாம்.
Tech sector maturing
கடந்த மூன்று தசாப்தங்களாக தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்தது மற்றும் சமீபத்திய பணிநீக்கங்கள் மேலும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு பிறகு முதிர்ச்சியடைந்ததற்கான அறிகுறியாகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Pressure from investors
கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நிதி மேலாளர்கள் மற்றும் ஆரம்ப முதலீட்டாளர்கள். நிறுவனங்களின் வளர்ச்சியின் மந்தநிலையை எதிர்கொள்ள விரைவான முடிவுகளை எடுக்க நிறுவன நிர்வாகத்தை தள்ளுகிறது.
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த ஒரு சில நிறுவனகள்:
Alphabet நிறுவனத்திற்குச் சொந்தமான google நிறுவனத்தின் பணியாளர்களில் இருந்து 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது.
Microsoft நிறுவனம் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.
Twitter நிறுவனம் 50% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
Meta நிறுவனம் 2022 நவம்பரில் அதன் மிக முக்கியமான பணிநீக்கங்களை அறிவித்தது. 11,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட 13% ஊழியர்களை அகற்ற திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Amazon நிறுவனத்தின் CEO, முதன்மையாக அதன் மனித வளங்கள் மற்றும் கடைகள் பிரிவுகளில் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Crypto.com தனது பணியாளர்களில் 20% பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை ஜனவரி 13 அன்று அறிவித்தது.
Salesforce நிறுவனம் அதன் பணியாளர்களில் 10% குறைக்கிறது மற்றும் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சில அலுவலக இடத்தை குறைக்கிறது.
ஜனவரி 10 அன்று, Coinbase தனது பணியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தது, ஏனெனில் அது crypto சந்தை வீழ்ச்சியின் போது பணத்தைப் பாதுகாக்கிறது.
Shopify நிறுவனம் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 10% ஆகும்.
Netflix நிறுவனம் 450 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
மேலும், இதில் உள்ள நிறுவனங்களை மட்டுமில்லாமல் இன்னும் சில நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது மற்றும் சில நிறுவனங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளனர்.
Conclusion
சமீபத்திய தொழில்நுட்ப நிறுவன பணிநீக்கங்களின் பின்னணியில் உள்ள காரணங்கள் சிக்கலானவை மற்றும் வேறுபட்டவை. COVID-19 தொற்றுநோய் நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், அது மட்டும் காரணி அல்ல. தொழில் வளர்ச்சி மற்றும் போட்டி அதிகரிக்கும் போது, நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இருப்பினும், தங்கள் ஊழியர்களுக்கு சரியான திட்டமிடல் மற்றும் முதலீடு மூலம், தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த சவால்களை தெளிவாக வழிநடத்தலாம்.
Comments (0)